தென்காசியில் இருசக்கர வாகனத்தின் சீட்டிற்கு கீழ் புகுந்த பாம்பை நீண்ட நேர போராட்டத்திற்குப்பின் வனத்துறையினர் பிடித்தனர்.
தென்காசி மாவட்டத்தின் நகர் பகுதியில் உள்ள தனியார் மொபைல் கடை ஒன்றின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அதன் உரிமையாளர் எடுக்கச் சென்றபோது சீட்டிற்கு கீழே எதுவோ இருப்பதைக் கண்டார். உடனே அவர் அங்கிருந்தவர்களை அழைக்க, அவர்கள் சீட்டை கம்பால் தூக்கிபார்த்தனர்.
அப்போது சீட்டிற்கு கீழ் பாம்பு ஒன்று நெளிவதை கண்ட அவர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் அங்கு சென்ற வீரர்கள், இருசக்கர வாகனத்தின் சீட்டை பிரித்து பார்த்தனர். ஆனால் அதில் பாம்பு இல்லை. பின்னர் டார்ச் லைட் கொண்டு தேடும்போது, வாகனத்தின் ஏர்பில்டர் என்ற ஓட்டை வழியாக பாம்பு வாகனத்திற்குள் புகுந்தது.
பல முறை முயற்சித்தும் பாம்பு வெளியே வராததால், பைக்கை ஸ்டார்ட் செய்தனர். அப்போது பாம்பு லேசாக தலையை வெளியே நிட்டியது. உடனே தீயணைப்பு வீரர் கணேசன் உட்பட அங்கிருந்தவர்கள் பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.