மில்லரின் கேட்சை மிஸ் செய்த ஷிவம் துபே! எரிச்சல் அடைந்த ஜடேஜா, பிராவோ!

மில்லரின் கேட்சை மிஸ் செய்த ஷிவம் துபே! எரிச்சல் அடைந்த ஜடேஜா, பிராவோ!
மில்லரின் கேட்சை மிஸ் செய்த ஷிவம் துபே! எரிச்சல் அடைந்த ஜடேஜா, பிராவோ!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியின் டேவிட் மில்லரின் சென்னை வீரர் ஷிவம் துபே மிஸ் செய்த போது, அணியின் கேப்டன் ஜடேஜா மற்றும் பந்துவீச்சாளர் பிராவோ இருவரும் எரிச்சலடைந்தனர்.

ஐபிஎல் 2022 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. துரதிர்ஷ்டவசமாக சென்னை அணி இந்த சீசனின் ஐந்தாவது தோல்வியை சந்தித்தது. இந்த முறை டேபிள் டாப்பர்களான குஜராத் டைட்டன்ஸ் பரபரப்பான மோதலில் வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணியும் கடுமையாக போராடியதால், ஆட்டம் இறுதி ஓவர் வரை பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்றது. கில்லராக மாறிய டேவிட் மில்லரின் அதிரடியால் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணி தோல்வியை தழுவியது.

இதற்கிடையில், ஷிவம் துபே பீல்டிங் செய்யும் போது ஒரு பிழை செய்யாமல் இருந்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும். ஆட்டத்தின் குஜராத் இன்னிங்ஸின் 17வது ஓவரை டுவைன் பிராவோ மில்லருக்கு எதிராக வீசினார். மில்லர் பிராவோ வீசிய மெதுவான பந்து வீச்சை எல்லைக் கயிறுகளுக்கு மேல் அடித்து நொறுக்க முயன்றார். ஆனால் பந்து சரியாக படவில்லை. பந்து டீப் மிட் விக்கெட்டுக்கு சென்றது. அங்கு ஷிவன் துபே நின்று கொண்டிருந்தார்.

அதிர்ச்சி என்னவென்றால், ஷிவம் துபே மூலம் பந்தை பிடிக்க முயற்சி செய்யவில்லை. நின்ற இடத்திலேயே அப்படியே நின்றது மற்ற சிஎஸ்கே பீல்டர்களை கோபத்தில் ஆழ்த்தியது. பிராவோ வெளிப்படையாக எரிச்சலை காண்பித்தார். கேப்டன் ஜடேஜா தனது தொப்பியைக் கூட கழற்றி தரையில் வீச முயன்றார். ஆனால் இறுதியில் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தினார். இந்த தவறு சென்னைக்கு விலை உயர்ந்தது. ஏனெனில் மில்லர் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்தார். குஜராத் வெற்றி பெற காரணமாக அமைந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com