கெடு நோக்கம் கொண்ட கதைகளால் மன்மோகன் சிங்கின் காங். ஆட்சி தூற்றி சிதைக்கப்பட்டது: சசிதரூர்

கெடு நோக்கம் கொண்ட கதைகளால் மன்மோகன் சிங்கின் காங். ஆட்சி தூற்றி சிதைக்கப்பட்டது: சசிதரூர்
கெடு நோக்கம் கொண்ட கதைகளால் மன்மோகன் சிங்கின் காங். ஆட்சி தூற்றி சிதைக்கப்பட்டது: சசிதரூர்

மன்மோகன் சிங்கின் ஆட்சிகாலம் கெடுநோக்கம் கொண்ட கதைகளால் தூற்றி சிதைக்கப்பட்டது. தாம் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டோம் என்ற பாடத்தை காங்கிரஸ் கட்சி கற்றுக்கொண்டு தன்னை புதுப்பிக்க வேண்டும். ஆனால் சித்தாந்த எதிரிகளின் கைகளால் ஆட்டுவிக்கப்படக்கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

 முன்னதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா “ 2014 ஆம் ஆண்டு பதவி விலகியபோது மன்மோகன் சிங் கூறிய வார்த்தைகள் “ வரலாறு எனக்கு கருணையுடன் இருக்கும்” என்றார். தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த சிலர் தேசத்துக்கான தனது பல்லாண்டு சேவையை நிராகரிப்பார்கள் என்றும், அவரது பாரம்பரியத்தை அழிக்க முற்படுவார்கள் என்றும் அவர் நினைத்திருக்க முடியுமா - அதுவும் அவர் முன்னிலையில்? “ என்று பதிவிட்டிருந்தார்.

அதுபோல முன்னாள் மத்திய அமைச்சர் மனீஷ் திவாரி “ 2004 முதல் 2014 வரை பாஜக ஆட்சியில் இல்லை. ஆனால் அந்த இக்கட்டான காலத்திலும் பாஜகவினர் வாஜ்பாயை குற்றம் சாட்டிக்கொண்டிருக்கவில்லை. ஆனால் துரதிருஷ்டவசமாக காங்கிரஸ் கட்சியினர் தற்போதும் பாஜக அரசை எதிர்த்து போராடுவதை விடவும், மன்மோகன் சிங் ஆட்சியைத்தான் எதிர்க்கின்றனர். பிரித்தாளப்படும்போதுதான் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும்” என்று டிவீட் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com