ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தாரா ஷேன் வாட்சன் ?

ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தாரா ஷேன் வாட்சன் ?

ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தாரா ஷேன் வாட்சன் ?
Published on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ஷேன் வாட்சன் தன்னுடைய ஓய்வை அறிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

2018 ஐபிஎல் தொடரில் சாம்பியன், 2019 தொடரில் ரன்னர் அப் என தொடர்ந்து சாதனைப்படைத்து வந்த சிஎஸ்கே அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் மோசமாகவே அமைந்தது. இந்த ஐபிஎல் கொடரில் 6 வெற்றிகளை மட்டுமே பெற்று 12 புள்ளிகளுடன் 7 ஆம் இடத்தை பிடித்தது சிஎஸ்கே. 2018, 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய ஷேன் வாட்சன், இந்தாண்டு தொடரில் சுமாரான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தினார்.

இந்தாண்டு ஐபிஎல்லில் ஒரே ஆறுதல் கடைசி மூன்று போட்டிகளில் வெற்றிப்பெற்று, இந்தத் தொடரை வெற்றியுடனே முடித்தது. இந்நிலையில் நேற்றைய கடைசி ஆட்டத்துக்கு பின்பு சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் ஷேன் வாட்சன் தான் ஓய்வுப்பெறுவதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து "டைம்ஸ் ஆஃப் இந்தியா" வெளியிட்டுள்ள செய்தியில்.

சிஎஸ்கேவின் ஓய்வு அறைக்கு சென்ற ஷேன் வாட்சன் "நான் ஓய்வுப்பெறுகிறேன். சிஎஸ்கே அணியில் இத்தனை ஆண்டுகாலம் விளையாடியதை பெருமையாக கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணிக்காக 2018 இல் 555 ரன்களும், 2019 இல் 398 ரன்களும், 2020 இல் 299 ரன்களை எடுத்துள்ளார். இந்தாண்டு அவருடைய அதிகப்ட்ச ஸ்கோர் 83 என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com