கிணற்றில் சடலமாக மிதந்த ஏழு வயது சிறுவன் உயிரிழப்பு... விக்கிரவாண்டி அருகே சோகம்

கிணற்றில் சடலமாக மிதந்த ஏழு வயது சிறுவன் உயிரிழப்பு... விக்கிரவாண்டி அருகே சோகம்

கிணற்றில் சடலமாக மிதந்த ஏழு வயது சிறுவன் உயிரிழப்பு... விக்கிரவாண்டி அருகே சோகம்
Published on

ஏழு வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த அன்னியூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் ஏழுவயது மகன் வெற்றி என்ற சிறுவன், மாலை வேளையில் நண்பர்களோடு விளையாட சென்றுள்ளான். விளையாடபோன சிறுவன் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனை தேடியுள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் கம்மங்கொல்லையின் அருகே உள்ள கிணற்றில் தேடியப் பார்த்த போது சிறுவன் நீரில் மூழ்கியபடி இருந்துள்ளான். உடனே சிறுவனை மீட்டு அன்னியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்த பிறகு மேல்சிகிச்சைகாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

ஏழு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com