இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை பெற்று, பக்ரீத் தின கொண்டாட்டங்களை தவிர்த்து நல்லடக்கம் மற்றும் தகனம் செய்து தங்களது மனிதநேய சேவையை வெளிப்படுத்தியுள்ளனர் எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்கள்.