ஷேர் ஆட்டோவில் வந்த பள்ளி ஆசிரியையின் செயின் பறிப்பு... சிசிடிவி காட்சி.!

ஷேர் ஆட்டோவில் வந்த பள்ளி ஆசிரியையின் செயின் பறிப்பு... சிசிடிவி காட்சி.!
ஷேர் ஆட்டோவில் வந்த பள்ளி ஆசிரியையின் செயின் பறிப்பு... சிசிடிவி காட்சி.!


பயணியாக ஷேர் ஆட்டோவில் வந்த பள்ளி ஆசிரியையின் செயினை பறித்துக் கொண்டு ஆட்டோவில் இருந்து தள்ளிவிட்டு சென்ற நபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர் அதன் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை பல்லாவரம் ஆட்டுதொட்டி அருகே ஆட்டோவில் பயணம் செய்த அரசு பள்ளி ஆசிரியையின் செயினை பறித்துக் கொண்டு கீழே தள்ளிவிட்ட இருவரை பொது மக்கள் மடக்கி பிடித்தனர்.


பம்மல் கிருஷ்ணா நகர் வாசுகி அம்மையார் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் ஊரப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று காலை பம்மலில் இருந்து ஷேர் ஆட்டோவில் ஏறி ஆட்டுத்தொட்டி அருகே வந்த போது ஆட்டோவில் ஏற்கனவே இருந்த பெண் ஒருவர் ஆசிரியையின் கழுத்தில் இருந்த 4 சவரன் செயினை பறித்துக் கொண்டு ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.


இதில் சாலையில் விழுந்த ஆசிரியைக்கு முகம் மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டது. கீழே விழுந்த ஆசிரியர் கூட்டலிடவே இதனை கண்ட பொது மக்கள் அந்த ஆட்டோவை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆசிரியையை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காது அருந்துவிட்டதால் 2 தையலும், தலையில் 7 தையலும் போடப்பட்டுள்ளது.


விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்த மாங்காட்டை சேர்ந்த பிரசாந்த, என்றும் அருகில் அமர்ந்து இருந்தவர் பம்மலை சேர்ந்த ரோஸ்மேரி என்றும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து தான் இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த சங்கர் நகர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com