வயதானவர்களிடம் ஏப்ரல் 5 வரை தபால் வாக்கு பெறப்படும்: சத்யபிரதா சாகு

வயதானவர்களிடம் ஏப்ரல் 5 வரை தபால் வாக்கு பெறப்படும்: சத்யபிரதா சாகு
வயதானவர்களிடம் ஏப்ரல் 5 வரை தபால் வாக்கு பெறப்படும்: சத்யபிரதா சாகு

80 வயதானோர், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து ஏப்ரல் 5-ஆம் தேதிவரை தபால் வாக்கு பெறப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “80 வயது நிரம்பிய 92,559 முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 30,894 பேருக்கு தபால் வாக்களிக்க விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை தபால் வாக்கு பெறப்படும். முதல்வரை விமர்சித்த ஆ.ராசாவின் விளக்கத்தை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் ஏப்ரல் 2 காலை 8 மணிவரை பெறப்படும். 4.66 லட்சம் தபால் வாக்குகளில் இதுவரை 1.31 லட்சம் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com