கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் காவலர்களுக்கு மருத்துவப் பரிசோதனை

கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் காவலர்களுக்கு மருத்துவப் பரிசோதனை
கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் காவலர்களுக்கு மருத்துவப் பரிசோதனை

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 3 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் மரணம் தொடர்பாகக் கொலை வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமைக் காவலர் முத்தையா உட்பட 5 போலீசாரை கைது சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். இதில் ஸ்ரீதர் உட்பட மூன்று பேருக்கு தற்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்படவுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com