பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் மாற்றம்

பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் மாற்றம்

பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் மாற்றம்
Published on

சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் நேற்று நள்ளிரவில் அதிரடியாக மாற்றப்பட்டார். 

பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2 மாதத்தில் கண்காணிப்பாளர் மாற்றப்படுவது இது 6 வது முறை ஆகும். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறைக்கு சென்ற நாள் முதல் பல்வேறு சர்ச்சைகள் எழுகிறது. அவருக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக சிறைத்துறை அதிகாரி ரூபா அதிரடி தகவலை வெளியிட்டார். அது முதல் அதிகாரிகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சசிகலா கையில் பையுடன் வெளியே சென்று வந்தது போல் ஒரு வீடியோ வெளியானது. இந்த வீடியோ வெளியானது எப்படி என விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சிறை கண்காணிப்பாளர் நிக்காம் பிரகாஷ் அம்பரீட் நள்ளிரவில் மாற்றப்பட்டுள்ளார். சசிகலா கடந்த ஜூன் மாதம் சிறையில் அடைக்கப்பட்டது முதல் பல்வேறு சட்டவிரோதமான சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் டிஐஜி ரூபா குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com