பயிற்சிக்கு திரும்பினார் ருதுராஜ் கெய்க்வாட் ! சிஎஸ்கே உற்சாகம்

பயிற்சிக்கு திரும்பினார் ருதுராஜ் கெய்க்வாட் ! சிஎஸ்கே உற்சாகம்

பயிற்சிக்கு திரும்பினார் ருதுராஜ் கெய்க்வாட் ! சிஎஸ்கே உற்சாகம்
Published on

இரண்டு முறை மேற்கொண்ட கொரோனா பரிசோதனை முடிவும் நெகட்டிவ் என வந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பயிற்சிக்கு திரும்பினார்.

நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடர் சனிக்கிழமை அபுதாபி மைதானத்தில் சிஎஸ்கே - மும்பை இண்டியன்ஸ் ஆட்டத்துடன் தொடங்கியது. இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக இந்த முறை முழுவதும் யுஏஇ-ல் (ஐக்கிய அரபு அமீரகத்தில்) நடைபெற்று வருகிறது. அபுதாபி, ஷர்ஜா மற்றும் துபாய் ஆகிய மூன்று மைதானங்களில் மட்டும் தொடரின் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளன.

இதனால் சிஎஸ்கே வீரர்கள் கடந்த மாதமே துபாய் சென்றனர். அங்கு அனைத்து அணி வீரர்களும் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சிஎஸ்கே அணியில் 2 வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதில் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் கொரோனாவிலிருந்து குணமடைந்து மும்பை அணியுடனான போட்டியிலேயே பங்கெடுத்தார்.

ஆனால், மற்றொரு வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்தாலும், அவருக்கு கூடுதலாக 2 பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாடுக்கு நடத்தப்பட்ட இரு முறை கொரோனா சோதனையிலும் அவருக்கு நெகட்டிவ் என வந்தது. இதனையடுத்து வலைப்பயிற்சிக்கு திரும்பினார் ருதுராஜ் கெய்க்வாட். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com