திண்டிவனம் அருகே சாலை விபத்து : குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு

திண்டிவனம் அருகே சாலை விபத்து : குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு
திண்டிவனம் அருகே சாலை விபத்து : குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு

திண்டிவனம் அருகே  ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பாதிரி கிராமத்திற்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், இன்று காலை திருநெல்வேலியிலிருந்து சென்னை நோக்கி சுமோ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் இரண்டு குழந்தைகள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் வாகனத்தில் பயணம் செய்தவர்கள், முருகராஜ், முருகன், சொரிமுத்து உள்ளிட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று பள்ளத்தில் கவிழ்ந்து இருந்த வாகனம் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.

காவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையிலும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்துதான் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com