ஆர்.கே.நகரில் மீண்டும் மருது கணேஷ் போட்டி: ஸ்டாலின் அறிவிப்பு

ஆர்.கே.நகரில் மீண்டும் மருது கணேஷ் போட்டி: ஸ்டாலின் அறிவிப்பு
ஆர்.கே.நகரில் மீண்டும் மருது கணேஷ் போட்டி: ஸ்டாலின் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் தேர்வு பற்றி திமுக சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் பேசிய  ஸ்டாலின்  ஆர்கே நகர் தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ்  போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

 தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிச.5 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரது மறைவுக்கு பிறகு அந்த தொகுதி காலியாக உள்ளது என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் ஆணையம் ஏப்ரல் 14ஆம் தேதி தேர்தலை நடத்த திட்டமிட்டு அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது.  ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக சார்பில் கடந்த முறை மருது கணேஷ் வேட்பாளராக களமிறங்கினார். பணப்பட்டுவாடா புகாரின் காரணமாக ஆர்.கே.நகர் தேர்தல்  ரத்து செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com