ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்வி தொடர்பாக 14 கேள்விகளை எழுப்பி, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு அவைத் தலைவர் மதுசூதனன் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் தனது தோல்விக்கு அதே பகுதியைச் சேர்ந்த அமைச்சர் பணியாற்றியதாக கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.