துளிர்க்கும் நம்பிக்கை: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் ரூ.50,000 நிதியுதவி

துளிர்க்கும் நம்பிக்கை: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் ரூ.50,000 நிதியுதவி
துளிர்க்கும் நம்பிக்கை: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் ரூ.50,000 நிதியுதவி

'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை'யின் முயற்சியை ஊக்குப்படுத்தும்விதமாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் ரூ.50,000 நன்கொடை வழங்கியுள்ளார்.

கொரோனா பேரிடர் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு உதவி புரியும் வகையில் 'புதிய தலைமுறை'யில் துளிர்க்கும் நம்பிக்கை என்ற இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் 'துளிர்க்கும் நம்பிக்கை'யை ஊக்கும்படுத்தும் விதமாக வங்கி மூலமாக 50 ஆயிரம் ரூபாயும், சென்னையைச் சேர்ந்த ராயன் பிரிட்டோ குடும்பத்தினர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த எத்திராஜ் கென்னடி தலா பத்தாயிரம் ரூபாயும் வழங்கியுள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி, வியாட்நாமில் இருந்து ரமேஷ் குடும்பத்தினரின் பத்தாயிரம் ரூபாயும் குவைத்தில் இருந்து கல்யாண் குடும்பத்தினர் பத்தாயிரம் ரூபாயும் பெறப்பட்டுள்ளது.

'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை' தொடங்கிய நாள் முதல் இதுவரை ஒன்றரை லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com