திமுக சார்பில் போட்டியிட சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி விருப்ப மனு!

திமுக சார்பில் போட்டியிட சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி விருப்ப மனு!
திமுக சார்பில் போட்டியிட சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி விருப்ப மனு!

திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த முன்னாள் நீதிபதியிடம், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.

திமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். இன்றுடன் நேர்காணல் முடிவடையும் நிலையில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வரும் 10ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்புதூர் தொகுதிக்கான வேட்பாளர் நேர்காணல் நேற்று நடைபெற்றது. அதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் 2003 - 2009 ஆண்டுவரை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற மோகன் என்பவர், கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி மோகன், பெரியார், அண்ணாவின் கொள்கைகளில் பற்று கொண்டிருப்பதால் திமுகவில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ததாகத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com