பாரபட்சமின்றி இடஒதுக்கீடு வழங்கப்படும் - அமைச்சர் அறிவிப்பு

பாரபட்சமின்றி இடஒதுக்கீடு வழங்கப்படும் - அமைச்சர் அறிவிப்பு

பாரபட்சமின்றி இடஒதுக்கீடு வழங்கப்படும் - அமைச்சர் அறிவிப்பு
Published on

மருத்துவ மாணவர் சேர்க்கையில் பாரபட்சமின்றி இட ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ஒதுக்கீடுகளும் முறையாக கையாளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வு முடிவு அடிப்படையில் நடைபெறும் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் 85 சதவீத இடங்களை மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அரசாணையை இன்று சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்தார். இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை செயலகத்தில் அளித்த பேட்டியில், நீட் தேர்வு முடிவு அடிப்படையில் நடைபெறும் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் 85 சதவீத இடங்களை மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார். மேலும் சிபிஎஸ்இ பாட திட்ட மாணவர்களுக்கு 15 சதவீத இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் இந்த இடஒதுக்கீடுகளிலும் உள் ஒதுக்கீட்டின் படி மாணவர்களின் சேர்க்கை நடைபெறும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 27-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com