100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் நீக்கம்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி!

100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் நீக்கம்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி!
100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் நீக்கம்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி!

தினகரன் ஆதரவாளர்கள் மீதான கட்சி நடவடிக்கையை அதிமுக மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. 3 மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி புதுக்கோட்டை, தருமபுரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் தகுதியிழப்பு செய்யப்பட்ட அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ஆர்.முருகன், அரூர் ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருப்பூர் சிவசாமி, செயற்குழு உறுப்பினர் விசாலாட்சி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com