ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா ? செங்கோட்டையன் கேள்வி

ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா ? செங்கோட்டையன் கேள்வி

ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா ? செங்கோட்டையன் கேள்வி
Published on

தன்னுடைய துறையை விமர்சிப்போர் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கலை இலக்கிய போட்டிகள் தொடக்க விழா தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிதி அமைச்சர் ஜெயகுமார் உட்பட 3 அமைச்சர்கள் கலந்துகொண்டு விழாவை தொடக்கி வைத்தனர். 

விழாவின் போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகல்வித்துறை மீது தொடர்ந்து குறை கூறி அறிக்கை விடுபவர்கள் தன்னிடம் அது குறித்து மேடையில் விவாதிக்க தயாரா? என்று கேள்வி எழுப்பினார். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரனை அப்பதவியிலிருந்து மாற்றக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com