தண்ணீரில் தத்தளித்த எலிக் குட்டிகள்: தாய் எலியின் பாசப் போராட்டம்.!

தண்ணீரில் தத்தளித்த எலிக் குட்டிகள்: தாய் எலியின் பாசப் போராட்டம்.!
தண்ணீரில் தத்தளித்த எலிக் குட்டிகள்: தாய் எலியின் பாசப் போராட்டம்.!

வந்தவாசியில் தொடர் மழை காரணமாக உயிருக்கு போராடிய எலிக் குட்டிகளை தாய்எலி காப்பாற்றிய காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக உயிருக்குப் போராடிய எலிக் குட்டிகளை தாய்எலி காப்பாற்றிய காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

வந்தவாசி மக்தும் மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் முகமது ரப்பீ. இவர் வீட்டின் எதிரே உள்ள ஒரு குழியில் எலி ஒன்று ஐந்துக்கு மேற்பட்ட குட்டிகள் ஈன்றுள்ளது. இந்நிலையில் தற்போது வந்தவாசி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.


இதன் காரணமாக குழியில் தண்ணீர் நிரம்பியதால் உயிருக்கு போராடிய எலிக் குட்டிகளை தாய் எலி தனது குட்டிகளை ஒவ்வொன்றாக வாயில் கவ்விக் கொண்டுவந்து வீட்டின் மாடி படிக்கட்டு அடியில் பாதுகாப்பாக காப்பாற்றி வைத்துக் கொண்டது. இந்த காட்சி  இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com