காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுத்த வாரம் பஹ்ரைன் சென்று அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் உரையாடுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவியேற்ற பிறகு ராகுல் செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது. வரும் 7 ஆம் தேதி பஹ்ரைன் புறப்படும் ராகுல், 8 ஆம் தேதி அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் உரையாடுகிறார். அதனைத்தொடர்ந்து அவர், பஹ்ரைன் பிரதமரையும் சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான குஜராத் மற்றும் ஹிமாச்சலப்பிரதேச தேர்தல் முடிவுகளுக்கு பின்பு, ராகுல் மேற்கொள்ளும் இந்த வெளிநாட்டு பயணம் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்தை முடித்து விட்டு, ராகுல் 9 ஆம் தேதி நாடு திரும்புவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. ராகுல் புத்தாண்டை தனது தாய் சோனியுடன் செலவழிக்க சமீபத்தில் கோவா சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.