ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது: ராகுல் காந்தி

ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது: ராகுல் காந்தி
ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது: ராகுல் காந்தி

ஒரு மாமனிதரின் இடத்தை நிரப்பும் மிகப்பெரிய பொறுப்பு மு.க.ஸ்டாலினுக்கு இருப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். 
கருணாநிதியின் வைரவிழாவில் பேசிய ராகுல் காந்தி, கருணாநிதி தமிழக மக்களால் மிகவும் நேசிக்கப்படுகிறார். அவரின் பேச்சு ஒட்டுமொத்த தமிழக மக்களின் குரலாகவே ஒலிக்கிறது என்றார். ஸ்டாலின் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்ட ராகுல், ஒரு மாமனிதரின் இடத்தை நிரப்பும் மிகப்பெரிய பொறுப்பு அவருக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டார். கருணாநிதியைப் பற்றி பேசுவதுபோல ஸ்டாலின் பற்றியும் வருங்காலத்தில் நாம் பேசுவோம் என்றும் ராகுல் குறிப்பிட்டார். எதிர்கட்சிகளை ஒடுக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, நாடு முழுவதும் ஒரே கலாசாரத்தைத் திணிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடியின் முயற்சியை நாம் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும் தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு எடுத்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொருளாதார வீழ்ச்சியை நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் ராகுல் காந்தி, தனது பேச்சில் குறிப்பிட்டார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com