தலித் பெண்ணை ராகுல் காந்தி திருமணம் செய்ய வேண்டும்: ராம்தாஸ் அத்வாலே

தலித் பெண்ணை ராகுல் காந்தி திருமணம் செய்ய வேண்டும்: ராம்தாஸ் அத்வாலே
தலித் பெண்ணை ராகுல் காந்தி திருமணம் செய்ய வேண்டும்: ராம்தாஸ் அத்வாலே

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலித் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தி உள்ளார்.

மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அத்வாலே இந்த கருத்தினை தெரிவித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “ராகுல் காந்தி நாளுக்கு நாள் முதிர்ச்சி பெற்று வருகிறார். அவரை இனி சிறு குழந்தை என்று சொல்ல இயலாது. அவர் தலித் வீடுகளுக்கு செல்கிறார். அங்கு உணவு சாப்பிடுகிறார். அவர் இன்னும் ஒருபடி மேல் சென்று மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்ற வேண்டும். கலப்பு திருமணம் செய்ய வேண்டும். சாதிகள் ஒழிய கலப்பு திருமணம் அவசியம் என்று மகாத்மா காந்தி வலியுறுத்தினார். காந்தியின் கருத்தினை ராகுல் காந்தி பின்பற்ற வேண்டும். அவரை திருமணம் செய்ய பல பெண்கள் தயாராக இருக்கிறார்கள். தற்போது ராகுல்காந்தி தான் முன் வரவேண்டும்” என்று கூறினார்.

சமீபத்தில் திருமணம் எப்போது? என்று குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கேட்டதற்கு, அது எப்போது நடக்க வேண்டுமோ? அப்போது நடக்கும் என்று ராகுல்காந்தி கூறினார். இந்த நிலையில் ராகுல் காந்தி தலித் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com