சசிகலா பரோல் குறித்து 2 அல்லது 3 நாட்களில் முடிவு தெரியும்: புகழேந்தி பேட்டி

சசிகலா பரோல் குறித்து 2 அல்லது 3 நாட்களில் முடிவு தெரியும்: புகழேந்தி பேட்டி

சசிகலா பரோல் குறித்து 2 அல்லது 3 நாட்களில் முடிவு தெரியும்: புகழேந்தி பேட்டி
Published on

சசிகலாவின் பரோல் குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவு தெரியவரும் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து பெங்களூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே சசிகலாவின் கணவர் நடராஜன்  உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சந்திப்பதற்காக சசிகலாவுக்கு பரோல் கோரி கர்நாடக சிறைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய தினகரன் ஆதரவாளரான புகழேந்தி, " சிறை விதிகளின் படி 6 மாதத்திற்குப் பின் பரோல் கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதால் அதனைக் கோடிட்டுக் காட்டி பரோல் கேட்டு மனு அளித்துள்ளோம். இந்த மனு சிறைத்துறை அதிகாரிகள் முன் நிலுவையில் உள்ளது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் இதுகுறித்து முடிவு தெரியவரும்" என்றார்.

இதனிடையே சசிகலா பரோலில் வந்தால் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் அவர் சொந்த காரணத்திற்காக பரோல் கேட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com