ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதிநீக்கம்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதிநீக்கம்
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதிநீக்கம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்த சில நாள்களில், இரட்டை ஆதாயப் பதவி என்னும் சிக்கல் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களுக்கு உருவானது. ஆம் ஆத்மி எம்.எம்.ஏ-க்களில் 20 பேர் நாடாளுமன்றச் செயலாளர்களாகப் பதவி வகித்தனர். 

எம்.எல்.ஏ-க்கள் 20 பேர் பாராளுமன்ற பதவி வகிப்பது சட்டபடி தவறு, அதனால், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று பிரஷாந்த் பட்டேல் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். தேர்தல் ஆணையமும் இதுபற்றி விசாரித்து வந்தது. இது சம்பந்தமாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் அளித்த மனுக்களைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. டெல்லி உயர் நீதிமன்றமும் எம்.எல்.ஏ-க்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்துவிட்டது.

இதனையடுத்து, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்யுமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்குப் பரிந்துரை செய்து தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இதனால், டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில், தேர்தல் ஆணையம் அனுப்பிய பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, 20 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட போதும், ஆம் ஆத்மி அரசுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் அரசியல் ரீதியாக பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 70 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மிக்கு 66 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். தற்போது 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 46 ஆக குறைந்துள்ளது. இருப்பினும், இடைத்தேர்தல் நடைபெற்று அதன் வெற்றி தோல்வியை பொறுத்து சட்டப்பேரவையில் எண்ணிக்கை 
மீண்டும் மாறும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com