பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி : ஆம்புலன்ஸிலேயே பிறந்த ஆண் குழந்தை..!

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி : ஆம்புலன்ஸிலேயே பிறந்த ஆண் குழந்தை..!

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி : ஆம்புலன்ஸிலேயே பிறந்த ஆண் குழந்தை..!

புதுக்கோட்டையில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸில் சுகப்பிரவசத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் அருகே உள்ள எருக்குமணிப்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி ஐஸ்வர்யா (23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஐஸ்வர்யா ராப்பூசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடானடியாக புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணியை அனுப்பிவைத்தனர். புதுக்கோட்டை நோக்கி 108 ஆம்புலன்ஸ் சென்றபோது முத்துடையான்பட்டி என்னும் இடத்தில் ஐஸ்வர்யாவிற்கு பிரசவ வலி அதிகரித்து துடிதுடித்துள்ளார். இதனால் ஐஸ்வர்யாவுக்கு ஆம்புலன்ஸிலேயே மருத்துவ உதவியாளர் பூபதிராஜா, 108 ஆம்புலன்ஸ் பைலட் தேவா பாஸ்கரன் ஆகியோர் பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில் அவருக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து தாய் ஐஸ்வர்யா மற்றும் குழந்தையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த ஆண்டில் இலுப்பூர் 108 ஆம்புலன்ஸில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸில் சுகப்பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் பத்திரமாக மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் பைலட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com