“பூஜ்ஜியத்திற்குள் ராஜ்ஜியம் என வாழ்கிறார் ஸ்டாலின்” - பொன்.ராதாகிருஷ்ணன்

“பூஜ்ஜியத்திற்குள் ராஜ்ஜியம் என வாழ்கிறார் ஸ்டாலின்” - பொன்.ராதாகிருஷ்ணன்
 “பூஜ்ஜியத்திற்குள் ராஜ்ஜியம் என வாழ்கிறார் ஸ்டாலின்” - பொன்.ராதாகிருஷ்ணன்

திமுக தலைவர் ஸ்டாலின் பூஜ்ஜியத்திற்குள் ஒரு ராஜ்ஜியம் என வாழ்ந்து ‌வருகிறார் என்றும் வெளியே வந்து பார்த்தால்தான் பாஜக சதம் அடித்திருப்பது தெரியும் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து நாகராஜகோவில் திடலில் ஸ்டாலின் பரப்புரை செய்தார். அப்போது, பேசிய அவர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எந்த நலத்திட்டங்களையும் மத்திய அமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் செய்யவில்லை எனவும் கொடுத்த எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை எனவும் விமர்சித்தார்.

பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து பேசிய ஸ்டாலின், பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை ஜீரோ என்றும், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையே சூப்பர் ஹீரோ என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் பூஜ்ஜியத்திற்குள் ஒரு ராஜ்ஜியம் என வாழ்ந்து ‌வருகிறார் என்றும் வெளியே வந்து பார்த்தால்தான் பாஜக சதம் அடித்திருப்பது தெரியும் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார். 

நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாஜகவின் தேர்தல் அறிக்கை ஜீரோ என ஸ்டாலின் விமர்சனம் செய்திருப்பது குறித்த கேள்விக்கு இந்தப் பதிலை கூறினார். 

மேலும், வடை சுடுவதையும் அடை சுடுவதையும் வைத்து தேர்தலை சந்திக்க முடியாது எனக் கூறிய மத்திய அமைச்சர், திமுக ஆட்சியில் இருந்தபோது‌ கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.

குமரி எங்கள் தொல்லை என்று ஸ்டாலின் கூறினார் எனவும் இதைவிட கன்னியாக்குமரி மாவட்ட மக்களுக்கு வேறு ஏதேனும் அவமானம் இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com