ஜோதிமணியை வேட்புமனுத்தாக்கல் செய்ய விடாமல் தடுத்த காவல்துறை

ஜோதிமணியை வேட்புமனுத்தாக்கல் செய்ய விடாமல் தடுத்த காவல்துறை
ஜோதிமணியை வேட்புமனுத்தாக்கல் செய்ய விடாமல் தடுத்த காவல்துறை

கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனுத்தாக்கல் செய்ய சென்றபோது காவல்துறையினர் அனுமதிக்க மறுத்ததால், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கரூர் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனுத்தாக்கல் செய்ய அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு 11.30 மணியும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு 12 மணியும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. 12.30 மணியளவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் திமுகவினருடன் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்காக ஜோதிமணி ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றார்.

அப்போது, அதிமுக வேட்பாளர் தம்பிரை வேட்புமனுத்தாக்கல் செய்து விட்டு அங்கிருந்ததால் ஜோதிமணியை வேட்புமனுத்தாக்கல் செய்யும் அறைக்குள் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. அதனால், ஜோதிமணியும், செந்தில் பாலாஜியும் காவல்துறையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரைமணி நேர வாக்குவாதத்திற்கு பிறகு, தம்பிதுரை அறையிலிருந்து வெளியேறியதும் ஜோதிமணியை காவல்துறையினர் வேட்புமனுத்தாக்கல் செய்ய அனுமதித்தனர். இதனால், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அசாதாரண சூழல் நிலவியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com