டிரெண்டிங்
தனி விமானம் மூலம் திருச்சி சென்றார் பிரதமர் மோடி: ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம்!
திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் சென்ற மோடி ரங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்
மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கேலோ விளையாட்டு தொடக்க விழாவில் பங்கேற்றார். ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் மோடி இரண்டாவது நாளான இன்று தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். ராமானுஜர் சக்ரத்தாழ்வார் சன்னிதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.