திருவாரூர்: மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

திருவாரூர்: மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
திருவாரூர்: மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குன்னியூர் கிராமத்தில் கடந்த 21ஆம் தேதி புதிய மதுபான கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த மதுபான கடைக்கு அருகில் கோயில் வழிபாட்டு தலங்கள் மற்றும் பள்ளிக் கூடம் ஆகியவை உள்ளன. குறிப்பாக இந்த மதுபான கடை வழியாகத்தான் பெண்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சென்று வர வேண்டும்.

இங்கு மதுபானக்கடை இருந்தால் மது அருந்திவிட்டு தினமும் பிரச்னை ஏற்படும். ஆகவே உடனடியாக மதுபான கடையை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி குன்னியூர் கிராம மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் கடையை அகற்ற வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com