ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி
Published on

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்பு விசாரணை ஆணையம் தேவையில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த தமிழக அரசு, தற்போது விசாரணை ஆணையம் அமைத்திருப்பது சந்தேகத்தை எழுப்புவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே விசாரணை ஆணைய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற நடைமுறையை தமிழக அரசு பின்பற்றவில்லை எனவும் தனது மனுவில் அவர் கூறியிருந்தார். இதனால் விசாரணை ஆணையத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை ஆணையத்தின் விசாரணை நேர்மையாக நடைபெறாது என்ற மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என தெரிவித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஜெயலலிதாவின் ‌மரணம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி தமிழக அரசு விசாரணை ஆணையத்தை அமைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com