பெரியகுளம்: ‘தலைவா வா தலைமை ஏற்க வா’-ஓ.பி.எஸ் ஆதரவு போஸ்டரால் பரபரப்பு...!

பெரியகுளம்: ‘தலைவா வா தலைமை ஏற்க வா’-ஓ.பி.எஸ் ஆதரவு போஸ்டரால் பரபரப்பு...!

பெரியகுளம்: ‘தலைவா வா தலைமை ஏற்க வா’-ஓ.பி.எஸ் ஆதரவு போஸ்டரால் பரபரப்பு...!
Published on

பெரியகுளம் பகுதியில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக 'தலைவா வா தலைமை ஏற்க வா' என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு எற்பட்டுள்ளது.

அதிமுகவில் கடந்த சில நாட்களாக, முதல்வர் வேட்பாளர் யார்? கட்சியின் தலைமை யார்? என ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்புக்கு இடையே தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கடந்த 3 நாட்களாக தமிழக துணைமுதல்வர் பன்னீர்செல்வம், அவரது பண்ணைவீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு நேற்று மாலை சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். 

 இதனைத்தொடர்ந்து இன்று காலைமுதல் சென்னையில் உள்ள தமிழக துணை முதல்வர் இல்லத்தில் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில் இன்று மாலை பெரியகுளத்தில் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் இல்லம் செல்லும் தென்கரை பகுதியில் உள்ள தெற்கு அக்ரஹாரம், காந்திசிலை, மற்றும் தேனிசாலை உள்ளிட்ட பகுதிகளில் ‘தலைவா வா தலைமை ஏற்க வா‘ என்ற வாசகங்களுடன் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ராஜமோகன் என்ற அதிமுகவை சேர்ந்த பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.

மேலும் தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்டுள்ள் அரசியல் பரபரப்புகளுக்கிடையே பெரியகுளம் பகுதியில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com