தாமதமாக வந்த பெரம்பலூர் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்

தாமதமாக வந்த பெரம்பலூர் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்

தாமதமாக வந்த பெரம்பலூர் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்
Published on

பெரம்பலூர் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் செந்தில் குமாரின் வேட்பு மனுவை பெற தேர்தல் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. இந்நிலையில் பெரம்பலூர் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் செந்தில் குமாரின் வேட்பு மனுவை பெற தேர்தல் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். 3 மணிக்கே வேட்புமனுத் தாக்கல் முடிந்த நிலையில் 3.20 மணிக்கு தாமதமாக வந்ததால் செய்தில் குமாரின் மனுவை ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவினை திரும்பப் பெற மார்ச் 29-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அத்துடன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 29-ல் வெளியிடப்பட உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com