பெரம்பலூர்: அதிமுகவில் ஐக்கியமான அமமுக பெண் வேட்பாளர் - அதிர்ச்சியில் தொண்டர்கள்!

பெரம்பலூர்: அதிமுகவில் ஐக்கியமான அமமுக பெண் வேட்பாளர் - அதிர்ச்சியில் தொண்டர்கள்!
பெரம்பலூர்: அதிமுகவில் ஐக்கியமான அமமுக பெண் வேட்பாளர் - அதிர்ச்சியில் தொண்டர்கள்!

பெரம்பலூர் நகராட்சியில் போட்டியிடும் அமமுக பெண் வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது வேட்பாளர்கள் தங்களது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சியில் 12வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அமமுக சார்பில் ரேவதி என்பவர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர், தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் திடீரென அதே வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பரமேஸ்வரிக்கு ஆதரவு தெரிவித்து, தனது ஆதரவாளர்களுடன் அதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் முன்னிலையில் ரேவதி இன்று அதிமுகவில் இணைந்தார். இதனால் அமமுக-வினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com