நாடாளுமன்றத்தில் பட்டையை கிளப்பும் தென்னிந்திய எம்.பிக்கள்

நாடாளுமன்றத்தில் பட்டையை கிளப்பும் தென்னிந்திய எம்.பிக்கள்
நாடாளுமன்றத்தில் பட்டையை கிளப்பும் தென்னிந்திய எம்.பிக்கள்

நாடாளுமன்றத்தின் இந்த அமர்வில் தென்னிந்திய மாநில எம்.பிக்களின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே தமிழ்நாடு, தெலுங்கானா, தெலுங்குதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திர மாநில எம்.பி.க்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகின்றனர். அதேபோல், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் பதாகைகளுடன் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக, திமுக எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி ஒற்றுமையை வெளிப்படுத்திய இருகட்சிகளும் அதனை நாடாளுமன்றத்திலும் கையாள்கிறது. அதேபோல், இடஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்றத்தில் தென்னிந்திய மாநில எம்.பிக்களின் தாக்கம் இந்த அமர்வில் அதிக அளவில் இருந்து வருகிறது. 

அதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தை எழுப்பி திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்களும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதான எதிர்கட்சியான காங்கிரஸை காட்டிலும், திரிணாமூல் காங்கிரஸ் அதிக ஆக்ரோஷத்துடன் அமளியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், கடந்த ஆறு நாட்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் முடங்கிப் போனதும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com