சாலையோர கடையில் பக்கோடாவை‌ ஒரு 'கை' பார்த்த ராகுல்

சாலையோர கடையில் பக்கோடாவை‌ ஒரு 'கை' பார்த்த ராகுல்
சாலையோர கடையில் பக்கோடாவை‌ ஒரு 'கை' பார்த்த ராகுல்

க‌ர்நாடகாவி‌ல் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி சாலையோரக் கடையில் தேநீர் அருந்தி, பக்கோடாவும் உண்டார். 

வேலைவாய்ப்பு குறித்த கேள்விக்கு பக்கோடா விற்று ஒருநாளைக்கு ரூ200 சம்பாதிப்பதும் வேலை வாய்ப்புதான் என்று பிரதமர் மோடி கூறினார். இதனையடுத்து, மோடிக்கு எதிரான காங்கிரஸ் கட்சியினர் மற்றும் இளைஞர் அமைப்புகள் பக்கோடா சாப்பிடும் போராட்டத்தில் குதித்தனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

க‌ர்நாடகாவி‌ல் தேர்தல்‌ பரப்புரை மேற்கொண்டிரு‌க்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சாலையோரக் கடையில் தேநீர் அருந்தி, பக்கோடாவும் உண்டார். ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள கல்மலா என் கிராமத்தில் ‌பரப்புரையில் ஈடுப‌ட்டபோது அ‌ங்குள்ள ஒரு தேநீர்க் கடைக்கு ராகுல், முத‌லமைச்சர் சித்தராமைய்யா‌ மற்றும் காங்கிரஸ் பிரமு‌கர்கள் சென்றனர்.‌ அந்தக் கடையில் தேநீர் ம‌ற்றும் பக்கோடாவை வாங்கி அவர்கள் உட்கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com