முதலமைச்சரின் அறிவிப்பை ஓபிஎஸ் வரவேற்பார்: தம்பிதுரை நம்பிக்கை

முதலமைச்சரின் அறிவிப்பை ஓபிஎஸ் வரவேற்பார்: தம்பிதுரை நம்பிக்கை

முதலமைச்சரின் அறிவிப்பை ஓபிஎஸ் வரவேற்பார்: தம்பிதுரை நம்பிக்கை
Published on

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை மற்றும் அவரது இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவது தொடர்பான முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்பை ஓபிஎஸ் வரவேற்பார் எனவும் அதிமுக ஆட்சியை காப்பாற்றுவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் எனவும் நம்புவதாக தம்பிதுரை கூறினார்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் எனவும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், முதலமைச்சரின் இந்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன். கட்சியில் அணி என்பது கிடையாது, கருத்து வேற்றுமைதான். ஓபிஎஸ் எங்கள் சகோதரர்தான். முதல்வரின் இந்த அறிவிப்பு அவருக்கு உகந்ததாக இருக்கும். அவர் வரவேற்பார் என்று கருதுகிறேன். ஓபிஎஸ்-ம் ஜெயலலிதா ஆட்சியிலே பணியாற்றியவர்தான், ஆட்சியில், கட்சியில் பொறுப்புக்களை வகித்தவர். ஆகவே அவரும் இந்த கட்சியை வழிப்படுத்துவதற்கு தன்னுடைய பங்கை ஆற்றுவார் என்று நான் நம்புகிறேன். கருத்து வேற்றுமை என்பது எல்லா கட்சியிலும் இருக்கிறது, எங்கள் கட்சியிலும் இருக்கிறது. 

முதலமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கட்சியில் உள்ள அனைவரும், ஓபிஎஸ் போன்றோரும் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக கட்சியில் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்.

சசிகலாவைப் பொறுத்தவரை, அவர் சிறையில் இருக்கிறார். அவரைப் பற்றி தற்போது பேச வேண்டிய தேவை இல்லை. சிறையில் இருப்பவர் பற்றி தற்போது கருத்து கூறுவது அவ்வளவு நாகரிகமாக இருக்காது. சசிகலா பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரை நீக்குவதற்கு எங்களைப் போன்ற தனிப்பட்ட நபர்களுக்கு அதிகாரம் இல்லை.

முதலமைச்சரின் அறிவிப்பு, மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது. ஜெயாலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டாம் என்று யாரும் கூறவில்லையே என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com