தமிழக அரசுக்கு எதிரான ஓபிஎஸ் அணி போராட்டம் தள்ளிவைப்பு

தமிழக அரசுக்கு எதிரான ஓபிஎஸ் அணி போராட்டம் தள்ளிவைப்பு
தமிழக அரசுக்கு எதிரான ஓபிஎஸ் அணி போராட்டம் தள்ளிவைப்பு

தமிழக அரசுக்கு எதிராக ஓபிஎஸ் அணி நடத்தவிருந்த போராட்டம் மற்றும் அந்த அணியின் புதுக்கோட்டை பொதுக்கூட்டம் ஆகியவை தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வு, டெங்கு பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் தமிழக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதாகக் கூறி ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஓபிஎஸ் அணி அறிவித்திருந்தது. ஆனால் காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை எனக் கூறி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட போராட்டம், தற்போது மீண்டும் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

19 ஆம் தேதி புதுக்கோட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதே இதற்கு காரணம் என ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் விளக்கமளித்தனர். இந்த சூழலில், மழை காரணமாக மைதானத்தில் நீர் தேங்கியிருப்பதால் புதுக்கோட்டை பொதுக்கூட்டமும் ஒத்திவைக்கப்படுவதாக ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது. அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்றுவரும் சூழலில் ஓபிஎஸ் அணியின் போராட்டமும், பொதுக்கூட்டமும் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com