“தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் உண்மை தெரியும்” - கனிமொழி

“தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் உண்மை தெரியும்” - கனிமொழி
“தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் உண்மை தெரியும்” - கனிமொழி

கருத்துக் கணிப்புகள் எப்படி இருந்தாலும் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் உண்மையான நிலவரம் தெரியும் என திமுகவைச் சேந்த கனிமொழி தெரிவித்துள்ளார். 

வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த வேண்டும் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, “22 கட்சிகளை சார்ந்த தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒன்றாக சேர்ந்து, தேர்தல் ஆணையரை சந்தித்து பல இடங்களில் சந்தேகத்திற்கு இடமாக உள்ள பல பிரச்னைகள் எடுத்து சொல்லியுள்ளோம். 

ஈவிஎம் இயந்திரங்கள் பல இடங்களில் யாருக்கும் அறிவிக்கப்படாமல் மாற்றம் செய்யப்படுகிறது. புதிய இயந்திரங்களை கொண்டு வருகிறார்கள். ஓட்டல்களிலும் வீடுகளிலும் ஈவிஎம் இயந்திரங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதுப்போன்று பல கேள்விகள், குழப்பங்கள் தரக்கூடிய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

எங்கள் சந்தேகங்களை தீர்க்கக்கூடிய வகையில் தேர்தல் ஆணையம் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே, விவிபாட் இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும் சோதனை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். 

கருத்துகணிப்புகள் எப்படி இருந்தாலும் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் உண்மையான நிலவரம் தெரியும். எங்களுக்கு சாதமாக இருந்தாலும் எதிராக இருந்தாலும் கருத்துகணிப்புளில் நம்பிக்கை இல்லை என ஸ்டாலின் தெளிவாக சொல்லியிருக்கிறார். அதனால் இதைப்பற்றி என்னுடைய கருத்தை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். தேர்தல் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாத தேர்தலாக இருக்க வேண்டும். அதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். அதுவே ஜனநாயக முறைத் தேர்தலாக இருக்க முடியும்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com