ஓணம் பண்டிகை - கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஓணம் பண்டிகை - கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஓணம் பண்டிகை - கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
Published on
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒன்றான ஓணம் பண்டிகை நேற்று முன்தினம் தொடங்கியது. பத்து நாட்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்  ஓணம் பண்டிகை, இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக களையிழந்துள்ளது. பண்டிகையை மக்கள் வீடுகளுக்குள் மட்டுமே கொண்டாட வேண்டும்; பொது இடங்களில் ஓணம் கொண்டாட்டங்களை நடத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை கேரளா அரசு விதித்துள்ளது.
 
 
கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் ஓணம் பண்டிகையான வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டார்.
 
உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக அறிவிக்கப்படும் வேலை நாளானது பின்னர் தனியாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com