கட்டியணைத்து வாழ்த்திய மூதாட்டி: வீடுகட்டிக் கொடுப்பதாக உறுதியளித்த ஓமலூர் காங் வேட்பாளர்

கட்டியணைத்து வாழ்த்திய மூதாட்டி: வீடுகட்டிக் கொடுப்பதாக உறுதியளித்த ஓமலூர் காங் வேட்பாளர்
கட்டியணைத்து வாழ்த்திய மூதாட்டி: வீடுகட்டிக் கொடுப்பதாக உறுதியளித்த ஓமலூர் காங் வேட்பாளர்

ஓமலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை கட்டியணைத்து வெற்றிபெறுவாய் என்று வாழ்த்துக்கூறி, மகிழ்ச்சியை பரிமாறிய மூதாட்டிக்கு வீடு கட்டிக் கொடுப்பதாக வேட்பாளர் மோகன் குமாரமங்கலம் உறுதியளித்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மோகன் குமாரமங்கலம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இந்தநிலையில், ஓமலூர் வட்டாரத்தில் நேற்று வாக்குகள் சேகரித்த அவர், காமண்டபட்டியில் உள்ள ஒரு மூதாட்டியின் வீட்டிற்கு சென்றார்.

அப்போது அங்கிருந்த மூதாட்டி மோகன், குமாரமங்கலத்தை பார்த்ததும் நெகிழ்ச்சியுடன் வரவேற்றார். தொடர்ந்து மிகுந்த கஷ்டத்தில் வாழ்ந்து வருவதாக கூறிய அந்த மூதாட்டி, உங்கள் குடும்பம் நல்லது செய்த குடும்பம், நீ வெற்றி பெறுவாய், உங்கள் அப்பாவைபோல நீயும் நல்லது செய்வாய் என்று கடவுளை வேண்டி வாழ்த்தினார்.

கட்டியணைத்து வாழ்த்திய பாட்டி, வேட்பாளருக்கு தண்ணீர் கொடுத்தார். தண்ணீரை குடித்த வேட்பாளர் மோகன், மூதாட்டியின் குறைகளை கேட்டறிந்தார். தேர்தல் முடிந்ததும் சொந்த நிதியில் மூதாட்டியின் குடும்பத்திற்கு வீடுகட்டி கொடுப்பதாக உறுதியளித்தார். மேலும், பாட்டியின் பேரனுக்கு காது கேட்காத நிலையில், காது கேட்கும் திறனுக்கான சிகிச்சை அளித்து, காது கேட்கும் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். காங்கிரஸ் வேட்பாளரின் எளிமையை, அன்பை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com