ஒரு குடும்பத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது: ஓபிஎஸ்

ஒரு குடும்பத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது: ஓபிஎஸ்

ஒரு குடும்பத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது: ஓபிஎஸ்
Published on

ஒரு குடும்பத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.

நாமக்கல் கருப்பட்டிபாளையத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர், ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியைக் கொண்டு செல்ல முயன்றவர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்தது என்று கூறினார். மலையோடு மோதினால் அவர்களின் தலைதான் உடையும்; ஆட்சியை கவிழ்க்க முயல்பவர்களுக்கு இது பொருந்தும் என்று மறைமுகமாக பேசினார். ஆட்சியை எப்படியாவது கலைத்துவிடலாம் என எண்ணுகிறார்கள். அதை வைத்து திமுக குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்கிறது என்றும் இருமொழி கொள்கையில் இருந்து அதிமுக என்றும் விலகாது என்றும் குறிப்பிட்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை அடுத்த வாரத்திற்குள் வீட்டுக்கு அனுப்புவோம் என்று அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சவால் விட்டிருந்தது கவனத்திற்குரியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com