குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உள்பட 21 பேருக்கு நோட்டீஸ்

குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உள்பட 21 பேருக்கு நோட்டீஸ்

குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உள்பட 21 பேருக்கு நோட்டீஸ்
Published on

தமிழக சட்டப்பேரவைக்குள் குட்கா பாக்கெட்டுகளைக் கொண்டு வந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உரிமைக் குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் உரிய விளக்கமளிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 6 அதிமுக உறுப்பினர்கள், திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர் என 13 பேர் பங்கேற்றனர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மூவர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற குட்கா விவகாரத்தை முதலமைச்சர் கையிலெடுத்துள்ளதாகவும், சட்டப்பேரவை உரிமைக்குழு கூடுவது பற்றி தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com