துளிர்க்கும் நம்பிக்கை: "குடும்ப அட்டை இல்லை, உணவு தேவை" - உதவிக்கரம் கோரும் குரல்

துளிர்க்கும் நம்பிக்கை: "குடும்ப அட்டை இல்லை, உணவு தேவை" - உதவிக்கரம் கோரும் குரல்
துளிர்க்கும் நம்பிக்கை: "குடும்ப அட்டை இல்லை, உணவு தேவை" - உதவிக்கரம் கோரும் குரல்

மூதாட்டியான நான், தனியாக வசிக்கிறேன். கண்பார்வையும் இல்லாதவர். உணவுப் பொருட்கள் தேவைப்படுகிறது” – கவுரம்மாள், ஓசூர்

“என் கணவர் 2 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். தனியாக வசிக்கிறார், குடும்ப அட்டை இல்லை, உணவுப் பொருட்கள் தேவை”  - முனியம்மாள், கோயம்புத்தூர்

“நான் காவலாளி. வேலையில்லை, குடும்ப அட்டையும் இல்லை. அதனால் அரசின் உதவியையும் பெற முடியவில்லை. உணவுப் பொருட்கள் தேவை” – மனோகரன், ஓசூர்

“என் கணவர் கூலித் தொழிலாளி, இரண்டு குழந்தைகள் உள்ளனர், ஆன்லைன் வகுப்புக்கு ஃபோன் தேவை” – லட்சுமி, ஓசூர்

“என் கணவர் இறந்து விட்டார். மகனும் மகளும் உள்ளனர். மகள் 12 ஆம் வகுப்பு முடித்திருக்கிறார். கல்லூரிப் படிப்பில் சேர உதவி தேவை– சகுந்தலா, ஓசூர்

“நான் பெயிண்டர். எனக்கு வேலையில்லை. 2 பிள்ளைகள் உள்ளனர், மகள் 2 ஆம் ஆண்டுடன் படிப்பை நிறுத்தி விட்டார், தற்போது படிப்பைத் தொடர உதவி தேவை” – முருகன், கோவில்பட்டி

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால், 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com