துளிர்க்கும் நம்பிக்கை: வாழ்வாதாரம் இழந்து தவிப்போருக்கு உதவும் தன்னார்வலர்கள்

துளிர்க்கும் நம்பிக்கை: வாழ்வாதாரம் இழந்து தவிப்போருக்கு உதவும் தன்னார்வலர்கள்
துளிர்க்கும் நம்பிக்கை: வாழ்வாதாரம் இழந்து தவிப்போருக்கு உதவும் தன்னார்வலர்கள்

கொரோனாவுடன் போராடி படிப்படியாக மீண்டு வந்தாலும், இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியாமல் பல குடும்பங்கள் தத்தளிக்கின்றன. தன்னார்வலர்கள் மூலம் அவர்களுக்கு உதவி வருகிறது புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு துளிர்க்கும் நம்பிக்கை இயக்கம் மூலம் உதவிகள் வழங்கப்பட்டன. 4 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை புதிய தலைமுறை அறக்கட்டளை வழங்கியுள்ளது.

திருச்சி மாவட்டம் சிறுகமணி பேரூராட்சிக்குட்பட்ட 3 மாற்றுத் திறனாளிகள் புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை இயக்கத்தை தொடர்புகொண்டு உதவி கோரினர். அவர்களுக்கு அல்லூர் சேவை தொண்டு நிறுவனம் சார்பில் அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டத்தில் கணவனால் கைவிடப்பட்டு வருமானமின்றி தவித்து வரும் இளம்பெண்ணின் குடும்பத்திற்கு ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஆல்பர்ட் ராஜா, ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து மாதந்தோறும் உதவிகள் வழங்குவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார். இதேபோல், கூலி தொழிலாளியின் குடும்பத்திற்கும் ஆல்பர்ட் ராஜா ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி பசியாற்றினார்.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகளை ஏற்று செய்யப்பட்டிருக்கும் சிறு உதவிகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

உதவி கோருவோருக்கும் உதவி புரிவோருக்கும் இடையே பாலமாக இருக்கும் துளிர்க்கும் நம்பிக்கை மூலம் பல குடும்பங்கள் பயனடைந்துள்ளன. மேலும் பல குடும்பங்கள் வாழ்வாதாரமிழந்து தவித்து வருவதாக தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வரும் நிலையில் தன்னார்வலர்கள் செய்யும் உதவி அவர்களது வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com