துளிர்க்கும் நம்பிக்கை: "தொழில் முடக்கம்; உணவின்றி தவிப்பு" - உதவிக்கரம் கோரும் குரல்

துளிர்க்கும் நம்பிக்கை: "தொழில் முடக்கம்; உணவின்றி தவிப்பு" - உதவிக்கரம் கோரும் குரல்
துளிர்க்கும் நம்பிக்கை: "தொழில் முடக்கம்; உணவின்றி தவிப்பு" - உதவிக்கரம் கோரும் குரல்

“கொரோனா காரணமாக, வேலை ஏதும் கிடைக்கவில்லை. வீட்டு வாடகைக்கு பண உதவி தேவை– செல்வராணி, திருச்சி

“நான் மாற்றுத்திறனாளி. எனக்கு, மளிகை உணவுப் பொருட்கள் தேவை” – ரவி, திருவள்ளூர்

“நான் ஐஸ் வியாபாரி. தொழிலில்லாத காரணத்தால், மளிகை உணவுப் பொருட்கள் தேவை” – சின்னா, சேலம்

வேலை இல்லை. 2 பிள்ளைகள் உள்ளனர். மளிகை, அரிசி தேவை. வீட்டு வாடகை செலுத்த பண உதவி தேவை” – பெலுசியா, திருவள்ளூர்

“நான் ஆட்டோ ஓட்டுனர். என் குடும்பத்துக்கு, மளிகை அரிசி தேவை” – நாகராஜ், திருவள்ளூர்

குடும்பத்தில் 3 பேர் உள்ளனர். யாருக்கும் வருமானம் இல்லை. உணவு, மளிகை தேவை” – இந்துமதி, திருவள்ளூர்

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com