ஒருவர் அணி மாறுவதால் எந்த பாதிப்பும் இல்லை: நத்தம் விஸ்வநாதன்

ஒருவர் அணி மாறுவதால் எந்த பாதிப்பும் இல்லை: நத்தம் விஸ்வநாதன்

ஒருவர் அணி மாறுவதால் எந்த பாதிப்பும் இல்லை: நத்தம் விஸ்வநாதன்

ஒருவர் அணி மாறுவதால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆறுக்குட்டி எம்எல்ஏ அணிமாற்றம் குறித்து ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;  "எடப்பாடி பழனிசாமி அணி எம்.எல்.ஏக்களை நம்பியுள்ளது நாங்கள் தொண்டர்களை நம்பி உள்ளோம். எம்எல்ஏ ஒருவர் அணி மாறுவதால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. சசிகலா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் என்பதை குறிக்கோளாக உடையவர்கள் அணி மாறமாட்டார்கள்" என அவர் தெரிவித்தார். இந்த அசாதாரண சூழ்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த இரு அணிகளும் இணையும் நம்பிக்கை அதிமுக தொண்டர்களிடையே வெகுவாக குறைந்து வருவதாகவும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com