’அரியர் பசங்க நாங்க’ என்ற பதாகைகளுடன் முதல்வரை வரவேற்ற இளைஞர்கள்!

’அரியர் பசங்க நாங்க’ என்ற பதாகைகளுடன் முதல்வரை வரவேற்ற இளைஞர்கள்!
’அரியர் பசங்க நாங்க’ என்ற பதாகைகளுடன் முதல்வரை வரவேற்ற இளைஞர்கள்!

நாகை மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டிருந்த போது, ‘அரியர் பசங்க நாங்க’ என்ற பதாகைகளுடன் மொட்டைமாடியில் நின்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்க.கதிரவனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாகை அவுரி திடலில் இன்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்த திடலுக்கு எதிரே இருந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் 'அரியர் மாணவர்கள் நாங்கள் எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கு’ என்ற வாசகம் எழுதிய பதாகைகளை அரியர்ஸ் மாணவர்கள் கையில் பிடித்தபடி நின்ற காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இதேபோல் நீண்ட நேரமாக முதல்வர் வருகைக்கு காத்திருந்த மகளிரணியினர் அங்கு இசைத்த பாட்டுக்கு ஏற்றபடி நடனமாடினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com