"திமுகவினரிடம் காசு வாங்கிக்கொண்டு அதிமுகவிற்கு வாக்களியுங்கள்" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

"திமுகவினரிடம் காசு வாங்கிக்கொண்டு அதிமுகவிற்கு வாக்களியுங்கள்" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
"திமுகவினரிடம் காசு வாங்கிக்கொண்டு அதிமுகவிற்கு வாக்களியுங்கள்" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

''திமுகவினர் ஓட்டுக்கு 5,000 ரூபாய் தர உள்ளனர். அதை வாங்கிக்கொண்டு அதிமுகவுக்கு வாக்களியுங்கள்'' என்று கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரையில் கூறி அதிமுகவினருக்கு வாக்கு சேகரித்தார்.

கரூர் மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எம்.ஆர் விஜயபாஸ்கர் இன்று காந்தி கிராமம் தொழிற்பேட்டை, பசுபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், 9 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றது. இந்த அரசின் சாதனை என்னவென்றால் என்று கூறிய முன்னாள் அமைச்சர், பிளாஸ்டிக் பையில் உருகிய வெல்லத்தை எடுத்துக் காண்பித்து பொங்கல் தொகுப்பில் வெல்லத்தை கொடுக்கச் சொன்னால், கிரீஸை கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

அவர் பேசியபோது, “கரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, நாடாளுமன்றத் தேர்தலின்போது, தமிழை சட்டசபைக்கும் தேர்தல் வர உள்ளது. எனவே இன்னும் 27 அமாவாசை மட்டுமே திமுக ஆட்சி இருக்கும். அதற்கு பிறகு திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். வெறும் 3 சதவீத வித்தியாசத்தில்தான் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது என்றார். இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் அதிமுக 200 இடங்களில் வெற்றிபெறும். பொய் சொல்லியே திமுக ஆட்சியைப் பிடித்தது” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், ’’ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க திமுகவினர் தயாராக இருக்கிறார்கள்; பணத்தை வாங்கிக்கொண்டு அதிமுகவுக்கு வாக்களியுங்கள்’’ என்று கூறி வாக்கு சேகரித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com