என் உயிருக்கு ஆபத்து: நடிகை சுமலதா புகார்

என் உயிருக்கு ஆபத்து: நடிகை சுமலதா புகார்
என் உயிருக்கு ஆபத்து: நடிகை சுமலதா புகார்

மாண்டியா தொகுதியில் போட்டியிடும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நடிகை சுமலதா புகார் தெரிவித்துள்ளார்.

தமிழில், திசை மாறிய பறவைகள், முரட்டுக்காளை, கழுகு, கரையெல்லாம் செண்பகப்பூ, ஒரு ஓடை நதியாகிறது உட்பட பல படங்களில் நடித்த வர் சுமலதா. இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்துள்ளார். இவர் 1991 ஆம் ஆண்டு கன்னட நடிகர் அம்பரீஷை திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் வசித்து வருகிறார். அம்பரீஷ் கடந்த வருடம் நவம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில், அம்பரீஷ் போட்டியிட்ட, மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார் சுமலதா. அவருக்கு பாஜக ஆதரவளித்து வருகிறது. பல கன்னட நடிகர்கள் அவருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

அவரை எதிர்த்து, காங்கிரஸ் கூட்டணி சார்பில் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இந் நிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சுமலதா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, ‘’தனது மகன் நிகில் தோற்றுவிடுவார் என்ற பயத்தில் குமாரசாமி எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தி வருகிறார். எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் எனது மகன் அபிஷேக் கவுடா, நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோரை அச்சுறுத்தும் வகையிலும் குமாரசாமி பேசி வருகிறார்.

மேலும் பிரசாரம் முடிவடைய இருக்கும் நாளில் (நாளை) என் மீது கல்வீசி தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்வதால் பாதுகாப்பு கேட்க முடிவு செய்துள்ளேன்’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com